இன்று அவள் கண்களே அதிகம் ஏங்குகிறது.
இப்போது அவள் என்னைக் காண வருகிறாள்!
இது ஒரு வர்ணிக்க முடியாத உணர்வு.
நீண்ட நாள் வாழ வேண்டும்
என்றேன்,
"ஏன்?" என்றான்.
அவளை காண முக்காலம் போதாது
என்றேன்,
"எடுத்துக்கொள்"
என்றான் எமன்.
போரை
பார்த்து பயம் இல்லை,
உன்னை
பார்க்காமல் போய்விடுமோ என்ற பயம்தான்.
உன்னைத்
தவிர என்னை வழிநடத்த யாரும் இல்லை.
தாமரை
மலருமோ, மலராதோ தெரியாது,
நான்
வராவிட்டால் வருந்தாதே.